முக்கொம்பு அணை உடைய காரணம் கண் திருஷ்டி தான் …!அடித்து கூறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Default Image

மேட்டூர் அணை நிரம்பிய கண் திருஷ்டியால்தான் முக்கொம்பு அணை உடைந்தது என்று  வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி திருச்சியில் உள்ள முக்கொம்பு மேலணையில் 8 மதகுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. திருச்சி – சேலம் சாலையில் வாத்தலை என்ற இடத்தில் முக்கொம்பு அணை உள்ளது.45 மதகுகளில் 8 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.அதன் பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முக்கொம்பு மேலணையில் மேலும் ஒரு மதகு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது முக்கொம்பு மேலணையில் மொத்தம் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான மதகுகள் உடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image result for வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

இந்நிலையில் இது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மேட்டூர் அணை உள்ளிட்ட பல அணைகள், நீரால் நிரம்பியிருக்கின்றது . இதனால் கண் திருஷ்டி ஏற்பட்டு விட்டது. இந்தக் கண் திருஷ்டியின் விளைவால், திருச்சி முக்கொம்பு அணை உடைந்து விட்டது என்று கூறினார் .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்