முக்கொம்பு அணை உடைந்தது…….தமிகத்தில் உள்ள அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன..???உயர்நீதிமன்ற கிளை பளார்..!!
தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட அணைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன…என்று உயர்நீதிமன்றம் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ரங்கசாமி என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில் உடைந்த முக்கொம்பு தடுப்பு அணையால் தஞ்சை, திருச்சி மாவட்ட விவசாயிகள் பெருமளவு பயனடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே அணையில் அருகே இருந்து அருகே மணல் அள்ளுவதற்கு அரசு அனுமதி வழங்கியது.இதனால் அங்கு மணல் அள்ளும் பணி சீரும் சிறப்பாக நடந்தது.
ஆனால் இதில் மணல் அள்ள உரிமம் பெற்றவர்களே முறைகேடாக அதிக அளவு மணல் அள்ளி அணைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தினர். மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள் பராமரிப்பு பணி நடைபெறாத நிலையில் 182 ஆண்டு பழமையான முக்கொம்பு அணை சுக்குனுறாக உடைந்தது.
இதனால் உடைந்து விவாசயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.மேலும் முக்கொம்பு அணை தொடர்பாக பராமரிப்பு பணியின் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழகத்தில் உள்ள மற்ற அணைகளான காவிரி, வைகை, தாமிரபரணி பாலாறு, தென்பெண்ணை உள்பட அனைத்து ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகள் மற்றும் அவற்ற்றின் தடுப்பு அணைகள் மற்றும் கதவு அணைகளை குறிப்பிட்ட காலகெடுவுக்குள் பராமரிக்கப்படுகிறதா..? என்று பாதுகாக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறினார்.
இந்த நிலையில் விசாரணைக்கு வந்த ரங்கசாமியின் மனுவை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பி இந்த மனு தொடர்பாக பதிலளிக்க தலைமை செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 3-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU