மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதை தடுக்கும் வகையில்,இருப்பிடத்தை அறிய உதவும் டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் வழங்குவது குறித்து மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்திய கடலோர காவல்படை டி.ஐ.ஜி. சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் தமிழக மீனவர்கள் தான் எல்லை தாண்டி மீன் பிடிக்க செல்வதாகவும், இரவு நேரத்தில் குழுக்களாக மீன் பிடிக்க செல்வதால் அவர்களை தடுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இருப்பிடத்தை அறிந்து கொள்ள இஸ்ரோ கண்டுபிடித்த 786 டிரன்ஸ்பாண்டர்கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. அப்போது நேரில் ஆஜராகி டிரான்ஸ்பாண்டர்களின் செயல்பாடுகளை நீதிபதிகளிடம் விளக்கிய இஸ்ரோ அதிகாரிகள், அவற்றின் விலை 40 ஆயிரம் ரூபாய் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, இந்த டிரான்ஸ்பாண்டர்களை மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்குவது குறித்து மத்திய – மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
DINASUVADU
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…