மிதிவண்டிகளை வழங்கி போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

Default Image

தமிழகத்தில் இதுவரை 32 லட்சம் மாணவ-மாணவியருக்கு, அரசு சார்பில் மடிக்கணினி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், மலைக்கோவிலூர் அரசு பள்ளியில், 193 மாணவர்களுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை அவர் வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை சுமார் 32 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 46 புள்ளி 8 சதவிகிதமாக உள்ளதாக அவர் கூறினார். அரசு பள்ளி மாணவர்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையை இது காட்டுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
DINASUVADU.COM 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்