அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு திசைதிருப்ப முயன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ,அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி, தன்னிடம் பயிலும் மாணவிகள் நான்கு பேரிடம் பாலியல் தொழிலுக்கு ஆசை காட்டியதாக புகார் கூறப்பட்டது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் நிர்மலா தேவி மீது அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் நிர்மலா தேவியை திங்கள்கிழமை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். இன்று அவரை சாத்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை 5 நாள் சிபிசிஐடி காவலுக்கு நீதிபதி அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், கோர்ட்டுக்கு வந்த நிர்மலாதேவிக்கு எதிராக பொதுமக்களும், சில வழக்கறிஞர்களும், மாதர் சங்கங்களும் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், நிர்மலாதேவிக்காக நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் பாலசுப்ரமணியன் வழக்கிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே வழக்கில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…