மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய நிர்மலா தேவி!சிறையில் அடைப்பு !

Published by
Venu

நிர்மலா தேவியை,மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய ஆடியோ வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நிலையில்  குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்திய போலீஸார் நடுவர் உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

விருதுநகர் தேவாங்கர் கல்லூரியின் கணிதப் பிரிவு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கல்லூரி மாணவிகளிடம் கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி செல்போனில் பேசி பாலியல் தொழிலுக்கு அழைக்கும் செல்போன் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதையடுத்து மாணவிகள் கொடுத்த புகாரில் பேராசிரியை கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பேராசிரியை பேசும் ஆடியோவில் 5 மாணவிகளைத் தேர்வு செய்து அவர்களிடம் செல்போனில் பேசும் பேராசிரியை ஐந்து பேருக்கும் ஆசை வார்த்தை கூறி, ‘மதிப்பெண் மற்றும் பெரிய அளவில் பணம் கிடைக்கும். சில பெரிய மனிதர்களுக்கு நீங்கள் தேவை. மிகுந்த பிரயாசைக்குப் பின்னர் உங்களை அணுகியுள்ளேன். இதனால் உங்கள் வாழ்க்கையே மாறும்’ என்று ஆசை காட்டிப் பேசுகிறார்.

ஆளுநர் மாளிகை வரை எனக்கு செல்வாக்கு உள்ளது, மேலும் இதில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் சிலரும் உள்ளனர் என்றெல்லாம் பேசி உள்ளார் என்றெல்லாம் பேசி மிகப்பெரிய விஐபிக்கு தேவை. அவர் பெயரைச்சொன்னாலே நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்கிறார். இந்த ஆடியோ இரண்டு நாட்களுக்கு முன் வெளியே வந்தது. இது நாடெங்கும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது.

பேராசிரியை நிர்மலா தேவி மீது தேவாங்கர் கல்லூரி நிர்வாகம் போலீஸில் புகார் அளித்தது.இதையடுத்து அருப்புக்கோட்டை போலீஸார் பேராசிரியர் நிர்மலா தேவி மீது, குற்றம் செய்ய வற்புறுத்தல், ஆபாசமாகப் பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். அருப்புக்கோட்டை டிஎஸ்பி தலைமையில் போலீஸார் பேராசிரியை நிர்மலா தேவியை நேற்றிரவு கைது செய்தனர்.

பின்னர் அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு நிர்மலா தேவியை அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை இரவு 2 மணி வரை உயர் அதிகாரிகள் விசாரித்தனர். பின்னர் காலையிலும் விசாரணை தொடர்ந்தது. கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் மாலை 7 மணி அளவில் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் மும்தாஜ் முன் நிர்மலா தேவியை போலீஸார் ஆஜர்படுத்தினர்.

ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியை வரும் ஏப்.28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நடுவர் மும்தாஜ் உத்தரவிட்டார். நிர்மலா தேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அருப்புக்கோட்டை போலீஸார் முடிவு செய்துள்ளனர். நாளை இதற்காக மனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago