ஓமலூர் அரசுப்பள்ளி மாணவிகளை கிண்டல் செய்து, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனின் தம்பி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று வந்த சேலம் மாரியப்பனின் தம்பி கோபி, சட்டக் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வருகின்றார். இந்நிலையில், அவரது சொந்த ஊரான ஓமலூர் அருகே உள்ள பெரியவடம்பட்டி அரசுப் பள்ளியில் பயிலும் மாணவிகளை, கோபி கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. மாணவிகளிடம் செல்போன் எண் கேட்டு மிரட்டுவதாகவும், தரமறுத்ததால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் விசாரிக்கச் சென்ற போலீசாரிடம் கோபி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாரியப்பனின் தம்பி கோபி அவரது நண்பர்கள் சபரி, ஜெயசூர்யா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், அவர்கள் ஓமலூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
dinasuvadu.com
இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…
சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…
சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…
சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…
சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…