மாணவிகளுக்கு ஆபாச பாடம்.! போக்ஸோ சட்டத்தில் பள்ளி ஆசிரியர் கைது.!

Default Image

கன்னியாகுமரி அரசு பள்ளியில் மாணவிகளுக்கு ஆபாச படமெடுத்த ஆசிரியர் கிருஸ்து தாஸ், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.   

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரணியல் பகுதி அரசு பள்ளியில், அக்கவுண்டன்சி படமெடுத்துவந்த ஆசிரியர் கிருஸ்து தாஸ் என்பவர், தன்னுடைய வகுப்பு மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்ததாக புகார் எழுந்தது.

முதலில் அப்பகுதி காவல் நிலையத்தில் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 6ஆம் தேதி பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் அறையை முற்றுகையிட்டபோது பிரச்னை பெரிதாகியது.

அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பெற்றோர்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து போக்ஸோ சட்டத்தில் பள்ளி அக்கவுண்டன்சி ஆசிரியர் கிருஸ்து தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்