“மாணவர் மனசு” என்ற பாலியல் புகார் பெட்டிகளை அமைக்க உத்தரவு..!

Default Image

“மாணவர் மனசு” என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க உத்தரவு.

பள்ளி, கல்லூரியில் மாணவிகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மூலம் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி வருகின்றனர். சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது புகார் அளித்து வருகின்றனர்.  இதுகுறித்து தமிழக அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது.

மேலும், பாலியல் தொடர்பாக புகார் அளிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், “மாணவர் மனசு” என்று எழுதப்பட்ட பாலியல் புகார் பெட்டிகளை வரும் 31-ம் தேதிக்குள் பள்ளிகளில் அமைக்க வேண்டும். 37,386 பள்ளிகளிலும் “மாணவர் மனசு” பெட்டியில் வரும் புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்