மாணவர்கள்,விவசாயிகளுக்கு அழைப்பு …!படை திரளட்டும்…! மத்திய, மாநில அரசு நடுங்கட்டும்…!

Published by
Venu

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மக்கள் படை திரளட்டும்; மத்திய, மாநில அரசு நடுங்கட்டும் என  கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்தும் மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை விகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்கள் படை திரளட்டும்; மத்திய, மாநில அரசு நடுங்கட்டும். ஏப்ரல் 5 ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கான பிரசாரத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள், மாணவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். காவிரி விவகாரம், மத்திய அரசின் வஞ்சகத்தை கண்டு மக்கள் கடும் சினம் கொண்டுள்ளதை உணர முடிகிறது. பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி போராட்டத்தை மக்கள் ஆதரவுடன் அறவழியில் நடத்திட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago