மாணவர்கள்,விவசாயிகளுக்கு அழைப்பு …!படை திரளட்டும்…! மத்திய, மாநில அரசு நடுங்கட்டும்…!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து மக்கள் படை திரளட்டும்; மத்திய, மாநில அரசு நடுங்கட்டும் என கட்சி தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்தும் மேலாண்மை வாரியம் அமைக்காமல், மேலும் 3 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளது மத்திய அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் ஆங்காங்கே பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை விகாரம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், மக்கள் படை திரளட்டும்; மத்திய, மாநில அரசு நடுங்கட்டும். ஏப்ரல் 5 ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கான பிரசாரத்தை விரைந்து மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள், மாணவர்கள் என அனைவரையும் ஒருங்கிணைத்து, முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும். காவிரி விவகாரம், மத்திய அரசின் வஞ்சகத்தை கண்டு மக்கள் கடும் சினம் கொண்டுள்ளதை உணர முடிகிறது. பிரதமர் வருகையின் போது கருப்புக் கொடி போராட்டத்தை மக்கள் ஆதரவுடன் அறவழியில் நடத்திட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.