மாணவனின் கையை ஒடித்த ஆசிரியர் ..!! மதுராந்தகத்தில் பரபரப்பு..

Published by
Dinasuvadu desk

மதுராந்தகம்:

வீட்டு பாடம் செய்யாத மாணவனின் கையை தலைமை ஆசிரியை விஜயா அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலைப்பாளையம் கிராமத்தில் அரசினர் நடுநிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் ஜீவரத்தினம் என்ற மாணவன் 5-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்நிலையில் ஜீவரத்தினம் என்ற மாணவன் வீட்டு பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி தலைமையாசிரியை விஜயா, மாணவனை அழைத்து பிரம்பால் சரமாரியாக அடித்துள்ளார். இதில் வலி பொறுக்க முடியாமல் அலறிதுடித்தான். பள்ளி தலைமை ஆசிரியை விஜயா அடித்ததால், மாணவன் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் மாணவன் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிரியர் தினமான இன்று, மாணவனை பள்ளி தலைமை ஆசிரியரே கையை அடித்து நொறுக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

DINASUVADU 

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

4 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

16 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

32 mins ago

மணிமேகலை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

35 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

42 mins ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

47 mins ago