மலைகோட்டை பயணிகளை பாடாய்படுத்தும் ரயில்வே நிர்வாகம்

Published by
மணிகண்டன்

திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது.

ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி கட்டணம் உயர்த்தப்பட்டது. மேலும் வழக்கமாக திருச்சியிலிருந்து இரவு 10.30க்கும், சென்னையிலிருந்தும் இரவு 10.30க்கும் புறப்பட்டது, இப்போது திருச்சியிலிருந்து இரவு  10.40க்கும், சென்னையிலிருந்து இரவு 11.30க்கும் புரபடுகிறது. இதனால் தாம்பரம் கடக்க இரவு 12 ஆகிவிடுவதால் மறுநாள் என்றாகிவிடுகிறது. இதனால் டிக்கெட் பரிசோதகருக்கும் பயணிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.பயணிகள் சங்கம் போராட்டம் நடத்தியும் எந்த பயனும் இல்லை. 

இதனை தொடர்ந்து ரயில் நிலையத்திலயே டிக்கெட் பரிசோதிக்கும் முறை இருந்த்தது. இதுவும் கடந்த நான்கு நாட்களாக நடந்த இச்சோதனை இப்போது பயணிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது.

இது தொடர்பாக திருச்சி நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் சேகரன் மற்றும் சண்முகவேலு ஆகியோர் கூறியதாவது, ‘ரயில்வே நிர்வாகம் பணம் சம்பாதிப்பதே குறிக்கோளாக கொண்டுள்ளது. பயணிகளின் நலத்தை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லை, இன்னும் என்னென்ன இடையுறுகள் செய்ய போகிறார்களோ தெரியவில்லை’ என ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

15 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago