மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழை பறைசாற்ற உறுதிமொழி ஏற்பு…!!

Default Image

அயராது உழைத்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதன் வெற்றி மலர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் என அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இந்த உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் வழிமொழிந்தனர்.
கடந்த 34 ஆண்டுகளாக ஓய்வறியாது உழைத்து அதிமுகவை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்க செய்த, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகழை எந்நாளும் பறைசாற்றிட உறுதி ஏற்கிறோம் என்று அதிமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்