மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன் சிறப்புகள் மற்றும் பயன்பாடுகள் என்ன தெரியுமா?
மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்புகள்
இந்தியாவில் 7 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. கூடுதலாக 12 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, முதல் கட்டமாக தமிழ்நாடு, தெலங்கானாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஆயிரத்து 264 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. இது, தெலங்கானா மாநிலத்திற்கு ஒதுக்கிய நிதியை விட 236 கோடி ரூபாய் அதிகமாக உள்ளது.
மதுரை தோப்பூரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், 100 எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடங்களும், 60 பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கான இடங்களும் ஒதுக்கப்பட உள்ளன. இது, தமிழகத்தில் மருத்துவ கனவோடு இருக்கும் மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக அமையும்.
பல்நோக்கு சிகிச்சை அளிப்பதற்காக, 15 முதல் 20 புதிய துறைகள் இடம் பெற உள்ளன. மருத்துவமனையில் 750 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதால், இதன் மூலம் அதிக உள்நோயாளிகள் பயன்பெற முடியும் என கூறப்படுகிறது.
இந்த மருத்துவமனை அமைவதன் மூலமாக, நாள்தோறும் ஆயிரத்து 500 புறநோயாளிகளும், மாதத்திற்கு ஆயிரம் உள்நோயாளிகளும் பயன்பெற முடியும்.மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், மருத்துவர்களுக்கான குடியிருப்புகள் உள்ளிட்ட பல வசதிகளோடு கட்டப்படவுள்ளது இந்த எய்ம்ஸ் மருத்துவ வளாகம். இது முழுவதுமாக முடிவடைய 45 மாதங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…