மக்கள் கோபம்…அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும்…..தமிழிசை சவுந்தரராஜன்…!!

Published by
Dinasuvadu desk
கஜா புயலால் பாதித்த மக்களின் கோபம் உணர்ந்து அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு நாகப்பட்டினத்துக்கும், வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடந்தது.
இந்த புயல் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்களை புரட்டி போட்டுவிட்டது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாலும், சாலைகளில் மரங்கள் விழுந்ததாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. உணவு, குடிநீர் கிடைக்காமல் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள். நாகை மாவட்டத்தில் தண்ணீர் சூழ்ந்த சில கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தனி தீவு போல் காட்சி அளிக்கின்றன.

புயல் பாதித்த பகுதிகளில் உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரண பொருட்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, புயலால் பாதித்த மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.  அந்த மக்களின் கோபத்தில் நியாயம் உள்ளது.
பிரதமர் மோடி மீது குற்றம் சுமத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ப. சிதம்பரம் பேச கூடாது.  நீண்ட காலம் நிதியமைச்சராக இருந்த அவர் என்ன செய்தார் என்று நினைத்து பார்க்க வேண்டும்.கஜா புயலால் பாதித்த மக்களின் கோபம் உணர்ந்து அரசு துரிதமுடன் செயல்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

4 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

4 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

4 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

4 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

5 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago