திண்டுக்கல் மாவட்டத்தில் சக போலீசார் முன்னிலையில் காவல் ஆய்வாளர் கெட்ட வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்து உதவி ஆய்வாளர் காவல்நிலையத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தண்டிக்குடி காவல்நிலையத்தில் ஆய்வாளராக இருப்பவர் சுபக்குமார். இவர் நேற்று காலை காலை 8 மணி அணிவகுப்பின் போது, எஸ்.ஐ. முருகேசனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன், காவல்நிலையத்திலேயே தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைகண்ட சக காவலர்கள் முருகேசனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஒருவர் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் காட்டித்தீ போல பரவியது. இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் சுபக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் சக காவலர்கள் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
முதற்கட்ட சிகிச்சை நிறைவடைந்த நிலையில் தற்போது முருகேசன் நலமுடன் உள்ளார் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உயரதிகாரிகள் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை மனஉளைச்சல் தரும் அளவில் நடந்து கொள்ள கூடாது என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
DINASUVADU
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…