போராளிக்கு இப்ப டைம் சரியில்ல..!போற இடமெல்லாம் பிரச்சனை..!!முத்து போட்ட பால்வளம்..!!

Default Image

மதிமுக பொது செயலாளர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
பால்வளத்துறை அமைச்சர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் அடுத்த வன்னியம்பட்டியில் இன்று அம்மா பூங்காவை திறந்து வைத்தார்.அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கு உடற்பயிற்சியும் செய்தார்.
Image result for rajendra balaji
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராஜேந்திர பாலாஜி மதிமுக பொது செயலாளர் வைகோவுக்கு முதலில் அவர் சென்ற இடமெல்லாம் சிறப்பாக  இருந்ததது.ஆனால் தற்போது அவர் சென்ற இடம் எல்லாம் பிரச்சனையாக மாறி உள்ளது என்று  கூறிய அவர் வைகோ ஒரு போராளியாக இருந்தாலும் அவருக்கு தற்போது நேரம் சரி இல்லை என்று முத்து போட்டு பார்க்கும் ஜோசியக்காரர் போல விமர்சனம் செய்தார்.மேலும் தற்போது நடந்து முடிந்த 5 மாநில தேர்த்ல் குறித்து கேட்கப்பட்ட போது  5 மாநில தேர்தல் தோல்வியை ஒரு  பாடமாக எடுத்துக்கொண்டு பா.ஜ.க. தன் தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்