கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் தனியார் தென்னை நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஓஷா என்ற வாலிபரும் பத்மாவதி என்ற இளம் பெண்ணும் வேலைக்கு சேர்ந்தனர்.
இந்நிலையில் நேற்று அவர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது திடீரென்று அவர்கள் இருவரும் தங்களுக்கு மயக்கம் வருவதுபோன்று இருப்பதாக சக தொழிலாளியிடம் தெரிவித்தனர். உடனே அவர்கள் அந்த 2 பேரையும் அந்தப்பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர், மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பத்மாவதியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் ஓஷாவின் உடலில் விஷப்பூச்சி கடித்ததற்கான அடையாளம் இருந்தது.இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பத்மாவதி எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.
அவருடைய மர்ம சாவு குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இது குறித்து போலீசார் , ‘ஓஷா, பத்மாவதி இருவரும் காதலர்களா? அல்லது கணவன்–மனைவியா?, அவர்கள் இருவரும் விஷம் குடித்தார்களா என்பது தெரியவில்லை. பத்மாவதி உடலை பிரேத பரிசோதனை செய்ததற்கான அறிக்கை வந்த பின்னர்தான் முழு விவரமும் தெரியவரும்’ என்றனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…