பேருந்து கட்டண உயர்வினை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் உட்பட பல அரசியல்வாதிகளும் போராட்டங்களை நடத்தினர். அதன் பின், கட்டணத்தை சிறிதளவில் தமிழக அரசு குறைத்து, அது இன்று முதல் அமலுக்கும் வந்ததது.
ஆனால், கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று சென்னை கொளத்தூரில் அத்தொகுதி எம்எல்ஏ ஆன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன. சாலையில் சுமார் 6 அரசுப் பேருந்துகளை மறித்து அதன் மீது ஏறி நின்று திமுகவினர் முழக்கமிட்டனர். அதனை அடுத்து போலீசார் ஸ்டாலின் உட்பட அனைவரையும் கைது செய்துள்ளனர். அதே போல் சிந்தாரிப்பேட்டை பகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளும் இணைந்துள்ளன. இந்தப் போராட்டத்தில் வைகோ, திருமாளவளவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…