பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை!அமைச்சர் ஜெயக்குமார்
பேராசிரியை விவகாரத்தில் தேவைப்பட்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும். ஆனால் மாநில காவல்துறையே சிறப்பாக விசாரணை நடத்தி வருகிறது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை பேராசிரியை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் தேவைப்பட்டால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.