சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஏழு குழுக்களை அமைத்துள்ளனர்.
விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சிபிசிஐடி ஆய்வாளர்களுடன் விசாரனை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் உதவி விசாரணை அதிகாரி முத்து சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், 7 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கல்லூரியில் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தேவாங்கர் கலை கல்லூரியில், கணித பேராசிரியராக பணியாற்றும் நிர்மலா தேவி என்பவர், மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல தொலைபேசியில் உரையாடிய ஆடியோ வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…