பேங்க் மேனேஜரின் வீட்டில் பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்த கொள்ளையன்-அம்பலப்படுத்திய சிசிடிவி காட்சிகள்

Default Image
  • வங்கி மேலாளர் வீட்டில் பட்டப்பகலில் சுவர் ஏறி குதித்து பயமில்லாம் கொள்ளையடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • வங்கி மேலாளர் வீட்டில் பட்டப்பகலில் கொள்ளையடித்தது  தவளக்குப்பத்தை சேர்ந்த பாலமகேந்திரன் என்று தெரியவந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் திருடன் ஒருவன் பட்டப்பகலில் வங்கி மேலாளரின் வீட்டில் சுவர் ஏறி குதித்து சிறிதும் அச்ச உணர்வின்றி திருடிய காட்சிகள் எல்லாம் சிசிடிவி கேமரா மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று பட்டபகலில் வங்கி மேலாளர் வீட்டில் சுவர் ஏறி குதித்து திருடன் ஒருவன் உள்ளே செல்கிறான்  சிறுது நேரத்தில் வீட்டில் உள்ளவற்றை கொள்ளையடித்து விட்டு சிறிதும் எந்த வித பயமும், பதற்றமின்றி வெளியே வருகிறான்.அங்கே தயராக நிறுத்தி வைத்திருந்த தனது இரு சக்கர வாகனத்தில் ஏறி தப்பித்து செல்கிறான்.இந்த கொள்ளைக்காட்சிகள் எல்லாம் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இது வெளியாகி உள்ளது.அதன்படி கொள்ளையடித்த திருடன்  தவளக்குப்பத்தை சேர்ந்த பாலமகேந்திரன் என்று தெரியவந்துள்ளது. பாலமகேந்திரனை கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்