பெண் பயணியை காலால் எட்டி உதைத்த பேருந்து ஓட்டுனர்..!

Default Image

ஈரோட்டில் பெண் பயணி ஒருவரை அரசு பேருந்து ஓட்டுனர் காலால் எட்டி உதைத்ததாக புகார் எழுந்துள்ளது.

கிருஷ்ணகிரியைச் சேர்ந்த பத்மாவதி என்பவர் தனது உறவினரான கர்ப்பிணி பெண்ணை உடன் அழைத்துக்கொண்டு ஈரோடு நகரப் பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து நிறுத்தத்தில் அந்தப் பெண் இறங்குவதற்கு முன் பேருந்தை நகர்த்தியதில் அவர் தடுமாறியுள்ளார். இதற்காக ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பத்மாவதியை ஓட்டுனர் சின்னசாமி எட்டி உதைத்ததாகக் கூறப்படுகிறது.

பத்மாவதி கொடுத்த புகாரின் அடிப்படையில் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்