9 ஆம் வகுப்பு மாணவி திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கடத்தப்பட்ட விவகாரத்தில், பெண் எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மண்ணச்ச நல்லூர் அடுத்த இனாம் கல்பாளையத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்த ராஜசேகர் என்ற 27 வயது நபர் கடத்திச்சென்றதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிவந்த ராஜசேகர், மணச்சநல்லூர் எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் ஆதரவாளர் என்று போலீசாரிடம் கூறியதால், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய மாணவியின் உறவினர்கள் எம்.எல்.ஏ பரமேஸ்வரியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாணவியின் உறவினர்களின் நெருக்கடியால் செய்வதறியாது திகைத்த எம்.எல்.ஏ பரமேஸ்வரியோ, தனது பெயரை தவறாக பயன்படுத்தி உள்ளதாகவும், “இன்னும் அரை மணி நேரத்தில் போலீசார் உங்கள் பெண்ணை மீட்டு வீட்டுக்கு கொண்டுவருவார்கள்” என்று வாக்குறுதி அளித்தார்.
அவர் கூறியபடியே அடுத்த அரைமனி நேரத்தில் 9 ஆம் வகுப்பு மாணவி மட்டும் காவல் நிலையத்துக்கு மீட்டு அழைத்து வரப்பட்டார். கடத்திச்சென்ற ராஜசேகரை காவல்துறையினர் தப்பவிட்டதாகக் கூறி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்
காதலனின் ஆசைவார்த்தையில் மயங்கி சிறுமியே விருப்பப்பட்டு சென்றாலும் அது கடத்தலாகவே பார்க்கப்படும் என்பதால் ராஜசேகர் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…