பிளஸ்1 சேர்க்கையில் தவறுகளை தடுக்கும் வகையில் நடவடிக்கை பாடவாரியாக இடஒதுக்கீடு!

Published by
Venu

பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோ,பிளஸ்1 சேர்க்கையில் பாடப்பிரிவு வாரியாக இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும் என்று  அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கைக்காக விண்ணப்பங்களும் வழங்கப்படுகின்றன. பொதுவாக பிளஸ்1 வகுப்பில் அறிவியல், கணித பாடப்பிரிவுகளான முதல், 2வது மற்றும் மூன்றாவது குரூப்களில் சேருவதற்கே மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் அந்த மூன்று குரூப்களிலும் சேர கடும் போட்டி நிலவுகிறது. இது மாணவர் சேர்க்கையில் குளறுபடிகளை ஏற்படுத்துவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுகிறது.

மேலும், மாணவர் விரும்பும் குரூப்களில் சேர அவர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இத்தகைய தவறுகளை களைய பிளஸ்1 வகுப்பில் குரூப்களில் சேர பாடவாரியாக இடஒதுக்கீடு முறையை  கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.  இதுதொடர்பாக அவர் அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மாணவர் சேர்க்கையின்போது, இடஒதுக்கீட்டு விதிகளை பாடப்பிரிவு வாரியாக கடைபிடிக்க வேண்டும். இதில் எந்த தவறுகளும், புகார்களும் இருக்கக்கூடாது’ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

47 mins ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

9 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

21 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago