பிரியாணி கடைக்குச் சென்று ஸ்டாலின் செய்த செயல் …!ஒருவழியாக தீர்ந்த பிரியாணி பிரச்சினை …!

Default Image

திமுக செயல்தலைவர் முக.ஸ்டாலின் பிரியாணி பிரச்சினை ஏற்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

விருகம்பாக்கம் திமுக தொண்டரணி பகுதி நிர்வாகி ‘பாக்ஸர் யுவராஜ் ஆவார்.இவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள கடை ஒன்றுக்கு பிரியாணி வாங்கச் சென்றுள்ளனர்.அங்கு பிரியாணி வாங்கச் சென்றனர்.பிரியாணி முடிந்தது என்று கடையில் உள்ளவர்கள் கூறியதால் அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர்.இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .இதன் பெயரில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வீடியோ ஓன்று வெளியிடப்பட்டது.அந்த வீடியோவை வைத்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பின்னர் சமூக வலைதளங்களில் பரவும்  செய்தியை அறிந்த திமுக செயல் தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் விருகம்பாக்கத்தில் உள்ள கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கழக கட்டுப்பாட்டை மீறியவர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். கழக நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் நேற்று  விருகம்பாக்கத்தில் தாக்குதல் நடைபெற்ற பிரியாணி கடையை திமுக செயல் தலைவர் முக. ஸ்டாலின் பார்வையிட்டார்.மேலும் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.இதனால் கடையின் நிர்வாகி மற்றும் ஊழியர்கள் மிகவும் சந்தோசம் அடைந்தனர் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்