பிரபல ரவுடியை கொலை செய்ய கத்திகளுடன் சுற்றிதிரிந்த மர்மகும்பல் கைது…!!

Published by
Dinasuvadu desk

சென்னை புளியந்தோப்பில் பிரபல ரவுடியை கொலைசெய்ய திட்டமிட்டு பட்டா கத்திகளுடன் சுற்றிதிரிந்த 4 பேரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பு பி.கே.காலனியை பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். குடிசை மாற்றுவாரியத்தில் பணிப்புரிந்து வரும் இவர், இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டிமிரட்டி பணம் மற்றும் செல்போனை பறித்துசென்றதாக கூறப்படுகிறது. ரஞ்சித் அளித்த புகாரையடுத்து, வியாசர்பாடி பகுதியில் புளியந்தோப்பு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரில் வந்த 4 பேரை சோதனை செய்ததில், பட்டா கத்தியுடன் வந்ததும், மேலும் இவர்கள் மீது பல்வேறு கொலை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களை தயார் செய்து வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சரவணன், சிவா, கோபால், ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த பட்டா கத்திகளையும் பறிமுதல் செய்தனர் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

2 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

10 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

22 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago