பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு  கோரிக்கை மனு …!

Published by
Venu

பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு  கோரிக்கை மனு அளித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை வந்த பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவை தனது தீர்ப்பில் கூறப்பட்ட மாற்றங்களுடன் செயல்படுத்த 6 வாரங்களில் திட்டம் வகுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு ஆணையிட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவு உச்சநீதிமன்றத் தீர்ப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக, கடந்த 9ஆம் தேதி உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார். எனவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது உச்சநீதிமன்ற உத்தரவின் ஒருங்கிணைந்த பகுதி ஆகிவிட்டது என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் அடுத்த பாசனப் பருவத்திற்கான விவசாயப் பணிகளை தொடங்கும் வகையில், மத்திய அரசால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என, பாசனத்திற்கு காவிரி நீரைச் சார்ந்துள்ள தமிழ்நாட்டின் டெல்டா பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மிகவும் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் காத்திருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

எனவே காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை செயல்படுத்துவதற்கு, உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அனைத்து அதிகாரங்களுடன் அமைக்குமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாகவும் கோரிக்கை மனுவில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

2 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

2 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

3 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

6 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago