பிரதமர் ஏன்..? புயல் பாதிப்பை பார்வையிட தமிழகம் வரவில்லை….!!தமிழ்நாடு இந்தியாவில் உள்ளதா…?அன்புமணி ராமதாஸ் சந்தேகம்..!!!

Default Image

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர்  தமிழகம் வராதது ஏன் என்று  பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர்  தமிழகம் வராதது ஏன் மற்றும் தமிழ்நாடு இந்தியாவில் தான் உள்ளதா? என்ற சந்தேகம் எழுவதாக விமர்சித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் தனது கட்சி நிர்வாகியின்  இல்ல விழாவில் கலந்து கொண்ட பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது கம்யூனிஸ்ட் ஆளுகின்ற கேரளாவிற்குச் சென்ற பிரதமர் மோடி ஏன்..? தமிழகம் வரவில்லை என்று அவர் கேள்வி எழுப்பிய அவர் ஏன் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்தியிருந்து மூத்த அமைச்சரையாவது அனுப்பி வைத்திருக்கலாமே என்ற கேள்வி கேட்டுள்ளார்.புயல் பாதித்து கிட்டத்தட்ட 10 நாள்களுக்கு மேல் ஆகியும் இந்திய பிரதமர் வந்து மக்களின் துயரங்களை பார்க்காதது மிகுந்த வேதனையையும்,வருத்தத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்