மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ,12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
யூடியூப் நேரலையில் மக்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். விரைவில் மய்யம் சார்பில் விசில் எனும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு குற்றங்கள் குறித்து அபாய ஒலி எழுப்பி சுட்டிக்காட்டப்படும் என தெரிவித்தார். தாம் அரசியலுக்கு வந்தது ஒரு நொடியில் எடுத்த முடிவல்ல என்றும், பல ஆண்டுகளாக யோசித்து எடுத்தது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் தற்போதைய சூழலில் காந்தி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தாலும், ஓட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் என்றார்.
தாம் டிவிட்டரில் மட்டும் கருத்துச் சொல்லுவதை விட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆவதாக கேள்வி ஒன்றுக்கு கமல் பதிலளித்துள்ளார். சதுர்வர்ணம், சாதி தான் வறுமையை ஏற்படுத்தக் காரணம் என கமல் கருத்து தெரிவித்துள்ளார். 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய கமல், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுப்பது அரசாட்சி அல்ல, ஒவ்வொரு குடும்பத்தினரின் மனசாட்சி எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…