பாலியல் பலாத்காரம் செய்தாலே மரண தண்டனை வழங்க வேண்டும் !கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ,12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தாலும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
யூடியூப் நேரலையில் மக்கள் கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார். விரைவில் மய்யம் சார்பில் விசில் எனும் ஆப் அறிமுகப்படுத்தப்பட்டு குற்றங்கள் குறித்து அபாய ஒலி எழுப்பி சுட்டிக்காட்டப்படும் என தெரிவித்தார். தாம் அரசியலுக்கு வந்தது ஒரு நொடியில் எடுத்த முடிவல்ல என்றும், பல ஆண்டுகளாக யோசித்து எடுத்தது என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த கமல் தற்போதைய சூழலில் காந்தி, பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் இருந்தாலும், ஓட்டு அரசியலுக்கு வந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கும் என்றார்.
தாம் டிவிட்டரில் மட்டும் கருத்துச் சொல்லுவதை விட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆவதாக கேள்வி ஒன்றுக்கு கமல் பதிலளித்துள்ளார். சதுர்வர்ணம், சாதி தான் வறுமையை ஏற்படுத்தக் காரணம் என கமல் கருத்து தெரிவித்துள்ளார். 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய கமல், இதுபோன்ற பிரச்னைகள் வராமல் தடுப்பது அரசாட்சி அல்ல, ஒவ்வொரு குடும்பத்தினரின் மனசாட்சி எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.