பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

Default Image

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே “நான் முதல்வன் ” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் தகவல்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. அப்போது பேரவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்து  பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் தொகுதிகளில் கல்லூரிகள் கேட்கிறார்கள் என தெரிவித்தார்.

பாலிடெக்னின் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவே ” நான் முதல்வன் ” திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியும், சுகாதாரமும் என் இரு கண்கள் என்று கூறியுள்ளார் முதலமைச்சர். கடந்த பட்ஜெட்டிலும், இந்த பட்ஜெட்டிலும் பல புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் காலத்தில் தேவை ஏற்பட்டால் ஊட்டி மஞ்சூரில் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
chandrababu naidu
ChandrababuNaidu
IND VS NZ CT 2025
mookuthi amman 2
sunil gavaskar rohit sharma
Actor Abhinay