பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலையை உடனே தடுக்க வேண்டும்…! முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலையை உடனே தடுக்க வேண்டும் என்று முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதற்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள், விவசாயிகள், மீனவர்களை முதல்வர் நேரடியாக சந்தித்து ஆலோசித்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அரசியல் செய்வதற்கு இது நேரமில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தற்கொலையை உடனே தடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.