தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டுவரமுடியாததால் திராவிட கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டுகிறது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சமீப காலமாக அதிமுகவின் முக்கிய பிரமுகர்களின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது.
குட்கா ஊழல் தொடர்பாக தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா ஆகியோரின் வீடுகளில் இந்தச் சோதனை நடந்தது.
இது தமிழகளவில் ஒரு அதிர்வலையை உண்டாக்கியது.இந்நிலையில் இந்த சோதனை நடைபெற்ற நாள் முதலே மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திமுக மற்றும் பாஜக மீது கடுமையான விமர்சனங்களை செய்து வருகிறார்.
இந்நிலையில் கரூர் பள்ளப்பட்டியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறுகையில்,தமிழகத்தில் காவித்தன்மையை கொண்டுவரமுடியாததால் திராவிட கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டுகிறது .மேலும் திமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க பல கட்ட முயற்சிகளை செய்து வருகிறது என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…