முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
6 மாதங்களுக்குள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் கூறி உள்ளார். ஜோதிடர் போல் தினகரன் நடந்து கொள்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சில சமயங்களில் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
இன்று தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. அவர்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்தில் 7-வது இடங்களுக்கு மேல் உள்ளது. இதனை அவர் மறந்து விட்டு பேசுகிறார். இதேபோல் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த பிறகு 49 சதவீதம் மாணவர்கள், உயர்கல்வியில் தமிழகத்தில் தான் சேருகிறார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கிராமங்களில் சாலை வசதி இல்லை.
எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் தேவையில்லாத கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கிருஷ்ணகிரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 500 பேருக்கு தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…