பாஜகவினருக்கும் திராவிடர் கழகத்தினருக்கும் இடையே மோதல்!20பேர் மீது வழக்குப் பதிவு!

Default Image

காவல்துறையினர், புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தினருக்கும் பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக இருபிரிவிலும் 20பேர் மீது  வழக்குப் பதிந்துள்ளனர். புதுச்சேரி வில்லியனூரில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பேச்சாளர் ஒருவர் கடவுள் குறித்துப் பேசியபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் மேடையை நோக்கிக் காலணி வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. அங்குத் திரண்டு வந்த பா.ஜ.க.வினர், தொடர்ந்து கூட்டம் நடத்த எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதனால் இருபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தலையிட்டு சமாதானப்படுத்தினர். இந்த மோதல் தொடர்பாக இரு பிரிவினரும் வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பாஜகவினர் 13பேர் மீதும், திராவிடர் கழகத்தினர் 7பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்