பரப்பன அக்ரஹார சிறையில் பரப்பான ஐ.டி. விசாரணை..!! 8 மணி நேரத்திற்கு பின் நிறைவு..!!

Default Image

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் 2-வது நாளாக  நடைபெற்ற விசாரணை  நிறைவு பெற்றது.
சொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தால் குற்றாவளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார்  சசிகலா.இவரிடம்  நேற்று ஐ.டி. அதிகாரிகள் சுமார் 8.30 மணி நேரம் விசாரித்த நிலையில் 2வது நாளாக இன்றும் நீடித்த ஐ.டி.விசாரணையானது  8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.8 மணிநேரம் நடத்தப்பட்ட விசாரணை தற்போது நிறைவு பெற்றுள்ளது.2017 ஆம் ஆண்டு நவம்பர்  8-ஆம் தேதி இந்தியாவிலே ஒரே நாளில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடியாக வருமான வரித்துறையினர் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கு ஆதராவாளர்கள் வீடுகளிலும் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் ஏன் தனியார் தொலைக்காட்சி நிறுவனமான ஜெயா டிவி நிறுவனத்திலும் சோதனை நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்பட்டது.இந்த சோதனையானது 5 நாட்கள் நடந்த நிலையில் இது தொடர்பாக  சிறையில் உள்ள சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்