பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகை..!

Published by
Dinasuvadu desk

பயிர் காப்பீட்டுக்கான இழப்பீடு தொகை சரிசெய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க கோரி  ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செங்கோட்டை, ரெகுராமபுரம், வெளவால்தொத்தி, புதுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.

இக்கிராம விவசாயிகள் மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். போதிய மழை இல்லாததால் விளைச்சல் இன்றி நஷ்டம் ஏற்பட்ட நிலையில் பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு 178 விவசாயிகளுக்கு ரூ. 44 லட்சத்து 55 ஆயிரத்து 570 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து ரெகுராமபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதில் பயனாளிகள் பட்டியலில் 77 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையானது சரியான பெயர் மற்றும் முகவரிக்கும், 101 விவசாயிகளுக்கு பெயரும், முகவரியும் வெவ்வேறாக தவறுதலாகவும் பதிவேற்றம் செய்யப்பட்டு அளிக்கப்பட்டிருப்பதால் இழப்பீட்டு தொகையை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதுகுறித்து ரெகுராமபுரம் கூட்டுறவு வங்கி தரப்பிலிருந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தவறுகளை களைந்து சரியான பட்டியல் அளிக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும் இதுநாள் வரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து திருத்தப்பட்ட பெயர் பட்டியல் அனுப்பப்படாததால் 101 விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு தொகையை விடுவிக்க முடியாத நிலை உள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு நாள்தோறும் வருகை தந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல நேரிடுவதால் விவசாயிகளுக்கும் கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் வெளவால்தொத்தி கிராம விவசாயிகள் செவ்வாய்க்கிழமை ரெகுராமபுரம் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்டு குளறுபடிகளை நிவர்த்தி செய்து இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டனர்.

இதில் விவசாயிகள் வரதராஜன், மருதுபாண்டி, ராஜாமணி, முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago