பயங்கரவாதிகளின் கைகளில் தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது..!பொன்.ராதாகிருஷ்ணன்..!
பயங்கரவாதிகளின் கைகளில் போய் கொண்டு இருக்கிறது என்றும், தனி நாடு கோரிக்கை வைப்பவர்களின் கை ஒன்றரை ஆண்டுகளாக ஓங்கி வருகிறது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பிரிவினைவாதிகளை போல் பேசுபவர்களை கண்காணிக்கும் பொறுப்பை தமிழக அரசு சரிவர செய்யவில்லை என்றும், பயங்கரவாதிகளின் மேலாதிக்கத்தால் பசும்பொன் தேவர் நினைவிடம், வ.உ.சி. நினைவிடம் போன்றவை தகர்க்கப்படும் நிலை வெகு விரைவில் வந்து விடும் என்று அச்சம் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்