பதிவான வீடியோக்கள் எங்கே..??அவகாசம் வேணும்-அடிபணிந்த ஆணையம்..அளிக்கமுடியாது-கோர்ட் அதிரடி

Default Image
  • வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள கண்காணிப்பு கேம்ராவில் பதிவான வீடியோ நகலை சமர்பிக்க நீதிபதிகள் உத்தரவு
  • வீடியோக்களை சமர்பிக்க ஆணையத்தால் கால அவகாசம் மேலும் மேலும் கேட்கப்பட்ட நிலையில் நீதிபதிகள் கால அவகாசம் அளிக்க மறுப்பு தெரிவித்து விட்டனர்.

 

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஆனது 2 கட்டங்களாக கடந்த ஆண்டின் இறுதியில் நடத்தப்பட்டது.வாக்கு எண்ணிகையானது ஜன.,2 தொடங்கி நடைபெற்றது இந்த வாக்கு எண்ணிக்கையில் பல குளறுபடிகள் நடந்து அங்கு வாக்கு எண்ணும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பின்னர் அறிவிக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக சென்னை உய்ர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரணை நடத்தி வரும் மதுரைக்கிளை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பதிவான கேமராக்களில் உள்ள வீடியோக்களை நகலை ஐகோர்ட்டு உரிய பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில் நீதிபதிகள் முன் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய  கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மீண்டும் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை நிராகரித்து வாக்கு எண்ணிக்கை வீடியோக்களின் பதிவுகளை தாக்கல் செய்யாமல் தங்கள் தாமத்திற்காக கூறும் காரணம் ஏற்புடையதல்ல என்று மதுரைஎன்று நீதிபதிகள் தெரிவித்தனர்து. சிசிடிவி பதிவு தொடர்பாக இனி மேலும் அவகாசம் எல்லாம் தர முடியாது என்று உத்தரவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
tn rain
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu
TN CM MK Stalin - BJP State president Annamalai
gold price
Annamalai - BJP-Tasmac