பட்டப்பகலில் நாமக்கல் அருகே பள்ளி மாணவர்களைக் ஆம்னி வேனில் வந்த கும்பல் கடத்த முயன்றதாக புகார்!

Published by
Venu

பட்டப் பகலில்  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பள்ளிச் சிறுவர்களை ஆம்னி வேனில் வந்த மர்மக்கும்பல் கத்தியைக் காட்டி மிரட்டி கடத்த முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரம் அடுத்த குச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆம்னி வேன் ஒன்று அவர்கள் அருகே வந்து நின்றது. உள்ளே இருந்தவர்கள் மாணவர்களுக்கு சாக்லேட் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சாக்லேட்டை மாணவர்கள் வாங்க மறுத்ததால் கத்தியைக் காட்டிய கும்பல், ஆம்னி வேனில் ஏறுமாறு மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அச்சத்தில் மாணவர்கள் கூச்சலிடவே அந்தக் கும்பல் வேனில் தப்பிச் சென்றுள்ளது.

இதை அடுத்து அங்கு திரண்ட பொதுமக்கள், சிறுவர்களிடம் நடந்தவற்றை கேட்டறிந்தனர். மாணவர்களை கடத்த முயற்சி செய்தவர்களை கைது செய்ய கோரி பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

1 hour ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

1 hour ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago