படிக்காமலேயே பட்டம் -117 பேர் தேர்வு முடிவுகள் ரத்து!

Default Image

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் படிக்காமலேயே பட்டம் பெற முயன்ற சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் 117 பேர் முறைகேடாக ஆன்லைன் முறையில் தேர்வெழுதி பட்டம் பெற முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி தேர்வில் 1980 ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் ஆன்லைன் தேர்வெழுத கடந்த 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வாய்ப்பை பயன்படுத்தி இவர்கள் மோசடியில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும்,தொலைதூர கல்வி பயிற்சி மையங்கள் தலா ரூ.3 லட்சம் வரை பெற்றுக்கொண்டு இந்த மோசடிக்கு உதவியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனையடுத்து,எந்த பட்டப்படிப்பிலும் சேராமலேயே ஆன்லைன் முறையில் தேர்வெழுதிய 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மேலும்,வேறு யாரேனும் இதுபோன்ற மோசடி செயலில் ஈடுப்பட்டுள்ளர்களா? என்று கண்டுபிடிக்க விசாரணை குழுவை அமைத்து சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கெளரி உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்