காதலியை கிண்டல் செய்த நண்பரை, சென்னை கோயம்பேட்டில் கொலை செய்துவிட்டு, விபத்து போல் ஜோடித்த நண்பரை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்பேடு மேட்டுக்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ். இவர் அதே பகுதியில் கார் ஷெட் ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். கணேஷின் 17 வயது நண்பர் காதலித்து வந்த பெண்ணை கணேஷ் அடிக்கடி விளையாட்டாக கிண்டல் செய்துவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 17 வயது சிறுவன் வீட்டிலிருந்து கணேஷை அழைத்துச் சென்று மது கொடுத்துள்ளார்.
பின்னர் அவரது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்துகொண்டு கோயம்பேடு அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது, பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுவன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கணேஷை இடுப்பில் குத்தியுள்ளார். இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த கணேஷின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதியது போன்று ஜோடித்து, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை தகவலறிந்து வந்த போலீசார் கணேஷ் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்ததாக எண்ணி உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையின்போது கத்தியால் குத்தப்பட்டு இறந்தது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றிய கோயம்பேடு போலீசார், 17 வயது சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கீழ்ப்பாக்கம் கெல்லீசிலுள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…