வேலூர் மாவட்டம் காட்பாடியில் இன்று பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான மரத்தான் போட்டி நடைபெற்றது இந்த போட்டியை அம்மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.துவக்கி வைத்துவிட்டு வருகையில் சாலையின் ஒரமாக பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் பரிதாபமாக பிச்சை எடுத்து கொண்டிருந்ததை பார்த்த ஆட்சியர் அப்பெண்ணின் அருகில் நேராக சென்று விசாரித்துள்ளார்.அப்பொழுது பதற்றம் அடைந்த அப்பெண் தான் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த புத்தூர் என்னுடை ஊர் அங்கிருந்து குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்து பிச்சை எடுத்து வருவதாகவும் அந்த கூறினார்.இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஆட்சியர் அதிர்ச்சியாகி கைக்குழந்தையுடன் அந்த பெண்ணை கைது செய்ய போலீசார்க்கு உத்தரவிட்டார்.
மேலும் அவர் கையில் வைத்திருந்த குழந்தையை அரியூர் பகுதியிலுள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.குழந்தைகள் எல்லாம் கடவுள்கள் அவர்களை இவ்வாறு வாடகைக்கு எடுத்து அவர்களை வெயில்,குளிர் என்று சிரமப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ,உரிய நேரத்தில் உணவு கொடுக்கப்படாத கொடுரங்களும் மனத்திற்கு வேதனையை தருகிறது.
கரங்களில் புத்தகத்தை தொட வேண்டிய காலத்தில் அடுத்தவரின் காய்ன்களை கண்கொட்டாமல் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் அதிர்ச்சியும்,இந்தியாவில் பல்வேறு இடங்களில் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது இந்தியா எத்துணை வளர்ச்சியை எட்டினாலும் இந்த பிரச்சணையின் வளர்ச்சியை மட்டும் தட்டி தடுக்க தவறுகிறதா.?என்று பொதுமக்கள் பொறுமிகின்றனர்.மேலும் பிச்சை எடுக்க ஈடுபடுத்தப்படும் குழந்தைகளின் படிப்பு மற்றும் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது.வேலூர் ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களது ஆதரவினை அளித்து வருகின்றனர்.
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…
பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…
டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…
கொல்கத்தா : தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான…
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…
அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…