பசுமைவழிச் சாலைக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு அதிக இழப்பீடு – எடப்பாடி பழனிசாமி..!

Published by
Dinasuvadu desk

சென்னைக்கும் சேலம் மாவட்டத்துக்கும் இடையே பசுமைவழிச் சாலை அமைக்க இருப்பதாக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அப்பகுதி மக்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசிய திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின், சென்னை சேலம் இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்காக 8 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதாகவும், இதனால் 5 மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும், எத்தனையோ சாலை பணிகள் நிலுவையில் இருக்க பசுமை சாலைக்கு மட்டும் அதிமுக அரசு அதிக அளவில் முக்கியத்துவம் அளிப்பது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும், பசுமை  சாலை அமைப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்ட பின்பு அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும் மு.க ஸ்டாலின் வலியுறுத்தினார்.
கோப்புப்படம்

எதிர்க்கட்சி தலைவரின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் சென்னை இடையேயான பசுமைவழிச் சாலைத் திட்டம் மத்திய அரசிடம் இருந்து போராடி பெற்ற திட்டம் என்றும், கடும் போராட்டத்துக்கு பிறகு பெறப்பட்ட திட்டத்தை ஏன் எதிர்க்கிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், மத்திய அரசு இந்த திட்டத்துக்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் சாலை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவ்வளவு பெரிய நிதி மாநில அரசிடம் இல்லை என்பதால் மத்திய அரசிடமும், உலக வங்கியிடம் இருந்தும் அந்த நிதியை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்த வழித்தடத்தில் மலைப்பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் சுரங்க வழி சாலைகளாகவே இருக்கும் எனவும், இந்த பசுமைவழிச் சாலைக்காக குறைவான அளவிலேயே மரங்கள் வெட்டப்படுவதாகவும் விடையளித்தார்.

மேலும், மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான இழப்பீட்டு தொகை அதிக அளவில் வழங்கப்படும் எனவும் சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

Recent Posts

இந்திய மகளிர் அணி படுதோல்வி..! 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த நியூஸிலாந்து!

துபாய் : இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், நியூஸிலாந்து மகளிர் அணியும்…

6 hours ago

“முதலமைச்சர் கோப்பை., 11.53 லட்சம் வீரர்கள்., ரூ.35 கோடி பரிசு.,”  உதயநிதி பெருமிதம்.!

சென்னை : மாநில அளவில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கப்பட்டன. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இந்த…

10 hours ago

சவாலாக அமைந்த தென்னாபிரிக்க வீராங்கனைகள்! 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிருக்கான டி20 உலகக்கோப்பை தொடரில் 3-வது போட்டியானது இன்று துபையில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

10 hours ago

இன்ஸ்டாவை மிஞ்சிய வாட்ஸ்அப்..! இந்த அம்சம் இங்கும் வரப்போகுது!

சென்னை : மெட்டா நிறுவனம் அடிக்கடி வாட்அப்பில் பயனர்களைக் கவர்ந்த இழுக்கும் வகையில், தொடர்ச்சியாக நல்ல அப்டேட்டுகளை கொண்டு வருகிறது.…

10 hours ago

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க சரஸ்வதி பூஜையை வழிபடும் முறை.. !

சென்னை - சரஸ்வதி பூஜை கொண்டாடுவதன் நோக்கம் மற்றும் வித்யாரம்பம் செய்யும் முறையை பற்றி இந்த ஆன்மீக குறிப்பில் காணலாம் …

11 hours ago

தனித்தனியாக நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்.! பிரதமர் மோடி முதல் மு.க.ஸ்டாலின் வரை…

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.…

11 hours ago