நேரு குடும்பத்துடன்..! கோபாலபுரம் குடும்பம்….மீண்டும் இணைந்திருக்கிறது..! அடுத்த பிரதமர் ராகுல்..! துரைமுருகன் பேச்சு..!!

Default Image

சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் “சூரியன் மறைவதில்லை” புத்தகத்தை சோனியாகாந்தி வெளியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.
கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் ‘சூரியன் மறைவதில்லை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் சோனியா காந்தி.இந்த விழாவில் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகிய முதல்வர்கள் ஒரே மேடையில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் துறைமுருகன்   கருணாநிதி இல்லை என்ற ஏக்கத்தை போக்கும் வகையில் கட்சியை சிறப்பாக நடத்தி வருகிறார் ஸ்டாலின்  கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
கருணாநிதியின் சிலையை சோனியாகாந்தி திறந்து வைத்தது திமுகவினருக்கு பெருமை மேலும் எதிரிகள் வகுக்கும் திட்டங்களை வீழ்த்தி தன்னிகரில்லா தலைவராக திகழ்பவர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் .
தேசிய தலைவர்கள் சென்னை வந்து சென்றால் அவர்களுக்கு புதிய பதவிகள் தேடிவரும் என்று பேசிய அவர் அடுத்த பிரதமராக வர ராகுல்காந்தி தகுதி படைத்தவர்,பிரதமர் மோடிக்கு சவாலாக இருக்கிறார் ராகுல்காந்தி, மத்தியில் ஒரு மாற்றம் கொண்டுவருவோம். கருணாநிதியை கவுரவிக்கும் எண்ணம் தற்போதைய தமிழக அரசுக்கு இல்லை. என்று சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துரைமுருகன்உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்