நெருங்கும் சூரசம்ஹாரம்…கந்த சஷ்டி நாளான நேற்று ஜெயந்திரநாதர் எழுந்தருளினார்..!!

Default Image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் 4 நாளான நேற்று கந்தசஷ்டி திருவிழாவில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Image result for திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா

தமிழ் கடவுள் முருகபெருமானின் அறுபடைவீடுகளில் 2-ம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று முன்தினம் அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் சிறப்பாக தொடங்கியது.

Image result for கந்தசஷ்டி விழா ஜெயந்திநாதர்

2-ம் திருநாளில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.இது அங்கு சிறப்பாக நடைபெறும்

Related image
இதன் பின்னர் உச்சவ சுவாமி ஜெயந்திநாதர்-வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் யாகசாலையில் எழுந்தருளிய பின் சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் நடந்தது.இதனை தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடந்தது.

Related image

விழாவின் முக்கிய நிகழ்வான 6-ம் நாள் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வருகிறது.இந்த நாளில் மாலை 4.30 மணிக்கு விழாவின் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைக்காண திரளாணபக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நாளை முருகபக்தர்கள் எதிர்நோக்கும் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related image

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்