நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்டபோது, உரிய நேரத்தில் உதவிசெய்து உயிரைக் காப்பாற்றிய அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, மின்வாரிய ஊழியர் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
கஜா புயலில் சிக்கி புதுக்கோட்டை மாவட்டம் கடும் சேதத்தை சந்தித்தது. அப்போது அங்கு மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த ராமச்சந்திரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. தகவலறிந்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவி செய்தார்.
அங்கு ராமச்சந்திரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் அமைச்சர் பரிந்துரைத்தார். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவர் உயிர் பிழைத்துக் கொண்டார். இந்நிலையில், மின்வாரிய ஊழியர் ராமச்சந்திரனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது தக்க சமயத்தில் உதவி செய்த அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஊழியர் ராமச்சந்திரன் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
dinasuvadu.com
சென்னை : மணிமேகலை விஷயத்தில் பிரியங்காவுக்கு எதிராக அவருடைய குணத்தை மட்டம் தட்டும் அளவுக்கு விமர்சனங்கள் எழுந்தது என்றே கூறலாம்.…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் தொகுதியில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை…
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில்…
சென்னை : நடிகர்கள் கார்த்தி, அரவிந்த் சாமி மற்றும் ஸ்ரீ திவ்யா உள்ளிட்டோர் நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் செப்டம்பர்…
சென்னை : தமிழகத்தில் சட்டவிரோத குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் சமீப காலமாக தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு…
சென்னை : திரௌபதி, ருத்ர தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குநர் மோகன் ஜி அடிக்கடி தனக்குத்…