நீர்நிலைகளை தூர்வாரிய செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்…!முத்தரசன்

Default Image

தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரிய செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் பெய்யும் கனமழையால் தமிழக அணைகளில் தண்ணீர் வேகமாக நிரம்பியது.ஆனால் அணை நிரம்பியதும் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.ஆனால் அந்த தண்ணீர் ஒரு பகுதிக்கு மட்டுமே சென்றது கடைமடை பகுதிக்கு செல்லவில்லை.இதனால் விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து  இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரிய செலவுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்றடைய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்